கெஜ்ரிவாலை ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்பத்தினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் காரில் தனது வீட்டிற்கு புறப்படும் போது ஆம் ஆத்மி தொண்டர்களிடம் கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். 

இதையடுத்து தனது இல்லத்திற்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, பெற்றோரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய அரவிந்த் கெஜ்ரிவால், அவர்களை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டதை ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.


Night
Day