கேரளாவில் ஏரியில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்ட வெள்ளயாணி பகுதியில் ஏரியில் குளித்த மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். வெங்கனூர் கிறிஸ்தவக் கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வெள்ளயாணியிலுள்ள வச்சமூலை பகுதிக்குச் சென்றுள்ளனர். தொடர்ந்து அங்குள்ள ஏரியில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக முகுந்தனுண்ணி, பெர்டின் மற்றும் லிபினோன் என்ற 3 மாணவர்களும் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்த்துறையினர் பல மணி நேரம் போராடி, சேற்றில் சிக்கியிருந்த 3 பேரின் உடல்களையும் மீட்டனர். 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Night
Day