கேரளாவில் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் பல்வேறு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு காய்ச்சல் பரவி மக்களை பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. டெங்கு, காலரா, எலிக்காய்ச்சல், வெஸ்ட்நைட் காய்ச்சல் போன்ற காய்ச்சலால் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 438 பேர் டெங்கு அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நேற்று ஓரே நாளில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Night
Day