கேரளாவில் பாஜகவுக்கு இரட்டை இலக்கங்களில் வெற்றியா : சசி தரூர் கிண்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் பாஜகவுக்கு இரட்டை இலக்கங்களில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவலை கண்டு தாம் பயந்துபோய் விட்டதாக, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கிண்டலாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர் வரும் மக்களவை தேர்தலில் பாஜக கேரளாவில் இரட்டை இலக்கங்களை கைப்பற்றும் என்றால், அது இரண்டு பூஜ்யங்களாகவே இருக்கும் என அவர் விமர்சித்துள்ளார். கேரளாவின் வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை பற்றி பா.ஜ.க. புரிந்து கொள்ளவே இல்லை எனவும், ஒரு சிறிய எல்லைக்கு மேல் கேரளாவில் மதவாதமும், சாதியவாதமும் எடுபடாது எனவும் சசிதரூர் கூறியுள்ளார்.

Night
Day