கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 8 மாவட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மேலும், கோழிக்கோடு மற்றும் கண்ணூரில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனிடையே, இன்று கனமழை வெளுத்து வாங்கும் திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் உட்பட 8 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Night
Day