கேரளாவை மத்திய அரசு மட்டப்படுத்துவதாக பினராயி விஜயன் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவை மத்திய அரசு மட்டப்படுத்துவதாக அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவும் தங்கள் மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வலியுறுத்தி டெல்லியில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் ஒரே மாதிரி பாவிக்க வேண்டும் என்றார்.
இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டு கொண்ட அவர், அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்பதற்கான கோரிக்கையின் முதல் போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக கூறினார். இந்த போராட்டம் மத்திய, மாநில அரசுகளின் உறவில் சமநிலையை பராமரிக்க உதவும் என்றும் கூறினார்.  

varient
Night
Day