கேரளா: ஆக்‍ரோஷமாக சுற்றித் திரியும் காட்டு யானை - பொதுமக்‍கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளா மாநிலம் வயநாடு அருகே கழுத்தில் ரேடியோ காலருடன் காட்டுயானை ஒன்று சாலையில் ஆக்‍ரோஷமாக சுற்றித்திரிவதால் பொதுமக்‍கள் அச்சமடைந்தனர். மன்னந்தவாடி நகர பகுதியில் காட்டுயானை ஒன்று கழுத்தில் ரேடியோ காலருடன் ஆக்ரோஷமாக சுற்றிதிரிவதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காட்டுயானையால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த ரேடியோ காலர் அலைகளை வைத்து பார்க்‍கும்போது இந்த யானை கர்நாடக வனப்பகுதியிலிருந்து தப்பி வந்துள்ளது தெரியவந்துள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் நகர பகுதியில் காட்டுயானை சுற்றி திரிவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினரும், காவல்துறையினரும் இந்த காட்டுயானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

Night
Day