கேரளா: பூனையை பச்சையாக சாப்பிட்ட அசாம் இளைஞர் - போலீசார் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளா மாநிலம் மலப்புறம் அருகே பூனை இறைச்சியை அப்படியே பச்சையாக சாப்பிட்ட அசாம் இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குட்டிபுரம் பேருந்து நிலையம் அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இறந்து போன நிலையில் கிடந்த பூனை ஒன்றை, பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை அதிகாரிகள், இளைஞரை மீட்டு அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day