கேரளா: வேனில் பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து - ஒருவர் பலி - 16 பேர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே திருவிழாவில் வெடிக்க கொண்டுவரப்பட்ட பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார், 16 பேர் படுகாயமடைந்தனர். சூரக்கரையில் அமைந்துள்ள புதிய காவு திருக்கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக பட்டாசு போட்டி நடைபெறவிருந்தது. இதற்காக பாலக்காட்டில் இருந்து டெம்போவில் உரிய அனுமதியின்றி பட்டாசுகளை கொண்டுவந்து இறக்கியபோது திடீரென வெடித்து சிதறியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 16 பேர் படுகாயமடைந்தனர். இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிவிபத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. 

varient
Night
Day