கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை தீவீரப்படுத்தி உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் கேரள தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் மம்கூட்டதில் கலந்து கொண்டதை அடுத்து, அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, கடந்த 10-ம் தேதி ராகுல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனை கண்டித்து, இளைஞர் காங்கிரசார் கேரளா முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று கோழிக்கோட்டில் பேராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை, காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

Night
Day