கேலோ இந்தியா போட்டிகளை ​தொடங்கி வைக்‍க தமிழகம் வரும் பிரதமர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேலோ இந்தியா போட்டிகளை ​தொடங்கி வைப்பதற்காக பிரதமர் ​மோடி ஜனவரி 19ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேலோ இந்தியா என்ற பெயரில் நாடு முழுவதும் இருந்து அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டிற்கான போட்டிகள் தமிழகத்தில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடக்க உள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இந்தப் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை துவக்கி வைக்க, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Night
Day