க்யூட் - யூஜி நுழைவுத் தேர்வுக்கு வரும் 19ம் தேதி மறுதேர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

க்யூட் - யூஜி நுழைவுத் தேர்வு தொடர்பாக புகார் தெரிவித்தவர்களுக்கான மறுதேர்வு வரும் 19ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நாடு முழுதும் உள்ள 261 மத்திய, மாநில, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைகளில், இளநிலை படிப்புகளில் சேருவதற்கான, க்யூட் நுழைவுத் தேர்வு மே மாதம் நடத்தப்பட்டது. 13.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வில் சில பாடங்களுக்கு நேரடியாகவும், சில பாடங்களுக்கு ஆன்லைனிலும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வு குறித்து புகார் தெரிவித்த மாணவர்களுக்கான மறுதேர்வு வரும் 19ம் தேதி ஆன்லைனில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தபட்ட மாணவர்களுக்கு இ-மெயில் முலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day