சக நீதிபதி மீது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் தனது சக நீதிபதி மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பான சிறப்பு விசாரணைக்காக உச்சநீதிமன்றம் இன்று கூடுகிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 மூத்த நீதிபதிகள் இந்த வழக்கை இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்கின்றனர். மருத்துவ சேர்க்கை முறைகேடுகள் தொடர்பான சிபிஐ விசாரணைக்கான ஒற்றை நீதிபதி உத்தரவிற்கு நீதிபதி சௌமென் சென் தலைமையிலான அமர்வு தடை விதித்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள நீதிபதி கங்கோபாத்யாய்,  மாநிலத்தை ஆளும் அரசியல் கட்சிக்கு ஆதரவாக நீதிபதி சௌமென் சென் செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தைத்தான் உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு இன்று விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day