சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத்தின் சுரேந்திரநகா் மாவட்டத்தில் இயங்கி வந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூன்று தொழிலாளா்கள் உயிரிழந்தனர். தங்காத் தாலுகாவில் உள்ள பேட் கிராமம் அருகே இருந்த அந்த சுரங்கத்தில் பணிகளில் ஈடுபட்டிருந்த லக்ஷ்மன் தபி, கோடாபாய் மக்வானா, விரம் கெராலியா என்ற மூன்று தொழிலாளா்கள் மூச்சுத் திணறல் காரணமாக பலியாகியுள்ளனர். உயிரிழந்த மூவரும் பணியின்போது தலைகவசம், முகக்கவசம் போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தவில்லை என்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தை நடத்தி வந்த பாஜக நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

Night
Day