சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி - ஆம்ஆத்மி வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் 36 கவுன்சிலர்கள் இன்று வாக்களித்தனர். அதில் பாஜக மேயர் வேட்பாளர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆம் ஆத்மீ - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் 12 வாக்குகள் பெற்ற நிலையில், 8 வாக்குகள் செல்லாதெனஅறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், தேர்தல் அலுவலர் திட்டமிட்டு வாக்குச்சீட்டுகளில் திருத்தம் செய்துள்ளதாக ஆம் ஆத்மீ - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமார், பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் அவசரமனு தாக்கல் செய்தார். இதனிடையே நாளை இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதாக நீதிமன்றம் உறுதியளித்துள்ளது.

varient
Night
Day