சத்தீஸ்கரில் 31 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

நாராயண்பூர்-தன்டேவாடா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடி படையினரும், போலீசாரும் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Night
Day