சத்தீஸ்கர்: கழுதைப்புலி கூட்டத்திடம் இருந்து கணவரை காப்பாற்றிய துணிச்சல் மனைவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சத்தீஸ்கரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த கணவரை தாக்கிய கழுதைப்புலிகளை அவரது மனைவி அடித்து விரட்டியுள்ளார். கோண்டகான் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி நந்து என்பவர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது, அங்கு அந்த கழுதைப்புலி கூட்டம் அவரை தாக்கியுள்ளது. நந்துவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி சுக்னி அருகில் இருந்த கட்டையால் கழுதைப்புலிகளை அடித்து விட்டியுள்ளார். இச்சம்பவத்தில், ஒரு கழுதைப்புலி உயிரிழந்த நிலையில், படுகாயத்துடன் நந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Night
Day