சத்தீஸ்கர்: தண்டேவாடா காட்டுப்பகுதியில் நக்சல்களின் பதுங்கு குழிகள் கண்டுபிடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சத்தீஸ்கரில் நக்சல்கள் பயன்படுத்தி வந்த பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா காட்டுப்பகுதி நக்சல்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். அடிக்கடி இங்கு நக்சல்கள் வேட்டையில் ஈடுபடும் பாதுகாப்பு படையினர், பல்வேறு சம்பவங்களில் முக்கிய நக்சலைட்களை என்கவுண்ட்டர் செய்துள்ளனர். இந்நிலையில் சத்தீஸ்கரில் நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. இதையடுத்து தண்டேவாடா காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினரால் நக்சலைட் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த வேட்டையில் தற்போது நக்சலைட்கள் பயன்படுத்திய பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

Night
Day