சத்ரபதி சிவாஜி சிலையை வடிவமைத்த சிற்பி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவில் உடைந்து விழுந்த சத்ரபதி சிவாஜி சிலையை வடிவமைத்த சிற்பி கைது செய்யபட்டார். 


மகாராஷ்டிர மாநிலம், ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 35 அடி உயரம் கொண்ட இந்த சிலை கடந்த 26ம் தேதி இடிந்து விழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிலையை வடிவமைத்த கட்டட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தானேவில் தலைமறைவாக இருந்த சிற்பி ஜெய்தீப் ஆப்தே என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day