சந்தேஷ்காலி விவகாரம் - ஷேக் ஷாஜகனை பாதுகாக்கிறார் மம்தா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சந்தேஷ்காலி விவகாரத்தில், ஷேக் ஷாஜகானை முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாதுகாப்பதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம்சாட்டி உள்ளார். ஷேக் ஷாஜகானை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்து திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது வாக்குகளை பெறுவதற்காக சமாதான முயற்சி என சாடியுள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ஷாஜகான் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யவில்லை என குற்றம்சாட்டினார். மக்களை பாதுகாப்பது போல், ஷாஜகானை மம்தா பானர்ஜி பாதுகாப்பதாக குற்றம்சாட்டிய அவர், ஷாஜகானை கைது செய்யவே நீண்ட காலம் எடுத்துக்கொண்டதாகவும், இதுபோன்ற பலரை ஏவி, இந்து பெண்களின் வாழ்க்கையில் மம்தா விளையாட வைப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

Night
Day