சந்தேஷ்காளி பாலியல் வன்கொடுமை சம்பவம் - முக்கிய புள்ளி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காளி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், முக்கிய புள்ளியாக குற்றம்சாட்டப்பட்ட ஷேக் ஷாஜகானை காவல்துறையினர் கைது செய்தனர். சந்தேஷ்காளி பகுதியில் பெண்களை தொடர்ந்து கூட்டு பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கியதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய ஷேக் ஷாஜகான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சிக்காரர் என்பதால் ஷேக் ஷாஜகானை பாதுகாப்பதாக பாஜக குற்றம்சாட்டி வந்தது. இந்த நிலையில், தலைமைறைவான ஷேக் ஷாஜகானை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று நள்ளிரவு வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் வைத்து மேற்கு வங்காள காவல்துறையின் சிறப்பு குழு கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 55 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருந்த நிலையில், ஷேக் ஷாஜகான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

Night
Day