சனாதனத்தை காக்க சட்டம் வேண்டும் - பவன் கல்யாண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிந்து போவீர்கள் என உதயநிதி ஸ்டாலினை ஆந்திர துணை முதலமைச்சர் மறைமுகமாக எச்சரித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதம் இருந்து திருப்பதிக்கு சென்றார். அப்போதும் அங்கு நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய, பவன் கல்யாண், சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள் என உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக எச்சரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day