சபாநாயகருக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் கடிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க கோரி சபாநாயகருக்கு அக்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் அளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 175 சட்டப்பேரவை தொகுதிகளில் இக்கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மட்டும் 135 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்நிலையில், 11 இடங்களுடன் மூன்றாவது இடத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தள்ளப்பட்டது. இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என சபாநாயகருக்கு, அக்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் கடிதம் எழுதியுள்ளார். 

Night
Day