சம்பாய் சோரன் பதவிப்பிரமாண விவகாரம் : காங்.தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அமைச்சர் பியூஸ் கோயல் விவாதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்கண்ட் முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கும், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் இடையே மாநிலங்களவையில் வார்த்தைப் போர் நடைபெற்றது. சம்பாய் சோரனின் பதவிப்பிரமாணத்திற்கு ஆளுநர் 48 மணி நேரம் தாமதித்ததாக குறிப்பிட்ட கார்கே, ஆனால், பீகாரில் காலையில் ராஜினாமா செய்த நிதிஷ்குமாருக்கு மாலையிலேயே பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது எப்படி எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பியூஷ் கோயல், போலிக் கையெழுத்துப் போட்டு 2018-ல் காங்கிரஸ் பட்டியல் போல் கொடுக்கப்பட்டுள்ளதா அல்லது அனைத்தும் ஒழுங்காக உள்ளதா என்பதை ஜார்கண்ட் ஆளுநர் உறுதி செய்ய நேரம் எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

Night
Day