சர்ச்சைக்குரிய வகையில் ராமாயண நாடகம்; ரூ.1.2 லட்சம் அபராதம் விதிப்பு!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஐஐடி ஆண்டு விழாவில் ராமாயண நாடகத்தை சர்ச்சைக்குரிய வகையில் நடத்திய மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ஐஐடி ஆண்டு விழாவில் மாணவர்கள் இணைந்து ராஹோவன் என்ற பெயரில் நாடகம் ஒன்றை நடத்தினர். ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அந்த நாடகத்தில், முன்னணி கதாபாத்திரங்களை இழிவாக சித்திரிக்கப்பட்டதோடு, மாணவர்கள் ஒருவரை ஒருவர் அவதூறாக பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் சிலர் புகாரளித்ததன்பேரில், சீனியர் மாணவர்கள் 4 பேருக்கு தலா ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாயும், மேலும் 4 பேருக்கு தலா 40 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்தது ஐஐடி மும்பை உத்தரவிட்டுள்ளது. 

Night
Day