சாக்லேட்டில் புழு : உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஹைதரபாத் மாநகராட்சி உறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே ஒரு கடையில் வாங்கிய சாக்லேட்டில் புழு நெளிந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட் மெட்ரோ நிலையத்தில் அமைந்துள்ள கடையில் ஒருவர் சாக்லேட் தினமான நேற்று DAIRY MILK சாக்லேட்டை வாங்கியுள்ளார். அந்நபர் சாக்லேட்டை பிரித்து சாப்பிட முயன்றபோது, அதில் புழு நெளிந்தபடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஹைதரபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Night
Day