சாலையில் உள்ள குழிகளை மணலிட்டு நிரப்பும் போலீசார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பையில் சாலை பள்ளத்தை போலீசார் மணல் கொட்டி நிரப்பும் காட்சி வைரலானதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசிற்கு சிவசேனா உத்தப் பிரிவுத் தலைவர் ஆதித்யா தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர்,   ஷிண்டே சேனா தலைமையிலான மாநில அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பதிலாக காவல்துறை ஏன் குழிகளை நிரப்புகிறது என்று தான் ஆச்சரியப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இது அவமானம் என்றும் சாடியுள்ளார்.

Night
Day