சிஐஎஸ்எஃப் முகாமில் தமிழக துணை ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி துவாரகா பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த துணை ராணுவ வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துவாரகா செக்டார் 16ல் உள்ள சிஐஎஸ்எஃப் முகாமில் மரத்தில் துணை ராணுவ வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட துணை ராணுவ வீரர் மதுரையை சேர்ந்த சிவபிரபு என்பது தெரியவந்தது. அவர், மெட்ரோ பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். துணை ராணுவ வீரரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day