சிஐஎஸ்எஃப் காவலரை கன்னத்தில் அறைந்த ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் CISF உதவி சப் இன்ஸ்பெக்டரை அறைந்த ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாகப் பேசிய சிஐஎஸ்எஃப் அதிகாரிகள், ஸ்பைஸ்ஜெட் ஊழியர் அனுராதா ராணி அதிகாலை 4 மணியளவில் மற்ற ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழையும் போது, ​​குறிப்பிட்ட கேட் வழியாக நுழைவதற்கான  அனுமதி இல்லாததால், உதவி சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் அவரை தடுத்து நிறுத்தியதாகவும் இதில் வாக்குவாதம் ஏற்பட்டு பெண் ஊழியர் உதவி சப் இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Night
Day