சிக்கன் பப்ஸில் எலி உலா வரும் வீடியோ வைரல் - பயணிகள் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ரயில் நிலையம் ஒன்றின் உணவகத்தில் பப்ஸுகளுக்குள் உலா வந்த எலியின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையமான கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள உணவகத்தில் வழக்கம் போல் பயணிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு கண்ணாடி பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிக்கன் பப்ஸுகளுக்கு மேல் எலி ஒன்று சென்றுள்ளது. இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.  

Night
Day