சித்தராமையாவை அணுக முயன்ற நபரை தடுத்து, பிடித்து தீவிர விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் குடியரசு தின அணிவகுப்பின்போது, முதலமைச்சரை அணுக ஒருவர் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் 75வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு பரேட் மைதானத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றபோது, ஒருவர் முதலமைச்சரை அணுக முயன்றார். இதனை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day