சித்தராமைய்யா மீது லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முடா வழக்கில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமய்யா மீது லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்துள்ளது.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிரான முடா வழக்கில் விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 24ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, 25ம் தேதி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. ஆனால் வழக்கு பதிவு செய்ய லோக் ஆயுக்தா காலதாமதம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது.  சட்ட ரீதியிலான ஆலோசனைகளை பெற்று வருவதால் வழக்கு பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதாக லோக் ஆயுக்தா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு நிலையில் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   

Night
Day