சிபிஐ முன்பு ஆஜராவாரா சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத சுரங்க டெண்டர் ஒதுக்கீட்டு குற்றச்சாட்டில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று சிபிஐ முன்பு ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2012 முதல் 2013ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உத்தரபிரதேச மாநில சுரங்கத்துறை அமைச்சராக அகிலேஷ் யாதவ் பதவி வகித்தபோது, விதிகளை மீறி சுரங்க டெண்டர்களை ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 2019-ம் ஆண்டு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்திருந்தன. இந்த நிலையில், சட்டவிரோத சுரங்க டெண்டர் ஒதுக்கீட்டு புகாரில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Night
Day