சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரகாசம் மாவட்டம் போடவாடா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் நேற்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ப்ரீ ஹீட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு பாய்லர் வெடித்துள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு படையினர் படுகாயமடைந்த 20 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து காரணமாக தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day