சிறார்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோர்களுக்கு அபராதம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்காலில் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பலர் மோட்டார் சைக்கிள்கள், கார்களை ஓட்டுவதால் விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே இதனை கட்டுக்குள் கொண்டுவர, 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால், பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கு 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என, காரைக்கால் மாவட்ட போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day