சீதாராம் யெச்சூரி உடலுக்கு முக்கிய தலைவர்கள் அஞ்சலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி, நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரியின் உடல் வைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை சீதாராம் யெச்சூரியின் உடல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், ராஜூவ் சுக்லா உட்பட பலர் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் அஞ்சலி செலுத்தினார்.

சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணிஷ் சிசோடியா மற்றும் எம்.பி சஞ்சய் சிங் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Night
Day