சீன வீரர்கள் மற்றும் ஆடு மேய்ப்பர்கள் இடையே வாக்குவாதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லடாக் பகுதியில் உள்ள காக்ஜங்க்கின் மேய்ச்சல் நிலம் தொடர்பாக சீன வீரர்கள் மற்றும் ஆடு மேய்ப்பர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. லடாக்கின் சுஷுல் பள்ளாத்தாக்கு பகுதியில் உள்ள காக்ஜங் பகுதியில் ஆடு மேய்ப்பர்கள் குழுவினரை, சீன ராணுவத்தின் ரோந்து பிரிவினர்ட் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, அவர்கள் சீன ரானுவத்தினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கவச வாகனத்தில் வந்த சீன வீரர்கள், ஆடு மேய்ப்பர்களையும், கால்நடைகளையும் பின்னே விரட்டினர். அப்போது, ஆடு மேய்ப்பர்கள் சீன வீரர்களை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய - சீன எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

varient
Night
Day