சுதந்திர தினத்தையொட்டி மணல் சிற்பத்தை உருவாக்கிய மணல் சிற்ப கலைஞர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சுதந்திர தினத்தையொட்டி ஒடிசாவில் உள்ள பூரி கடற்கடையில் மணற்சிற்ப கலைஞர் உருவாக்கிய மணல் சிற்பம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக உருவாக்கி வருகிறார். அந்த வகையில், நாட்டின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இது தொடர்பான மணல் சிற்பத்தை உருவாக்கினார். இரு சிறுவர்கள் கொடியேந்தியது போன்று தத்ரூபமாக மணல் கலையை உருவாக்கியுள்ள அவர், ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி என்ற வாசகத்தை குறிப்பிட்டு சுதந்திர தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

varient
Night
Day