சுயமரியாதையுடன் வாழ பாஜக ஆட்சியை தூக்கி எறியுங்கள் - பிரியங்கா காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திறமைகள் இருந்தும் தவறான நிர்வாகத்தால் ஹரியானா மாநில இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவிப்பதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஹரியானாவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய பிரியங்கா காந்தி, சுயமரியாதையுடன் வாழவேண்டுமென்றால் ஹரியானாவில் இருந்து பாஜக ஆட்சி தூக்கி எரியப்பட வேண்டுமென பிரச்சாரம் செய்தார். மேலும் ஹரியானா மாநில இளைஞர்களுக்கு திறமைகள் இருந்தும், மாநில அரசு வேலைகளில் காலி பணியிடங்கள் இருந்தும், தவறான நிர்வாகத்தால் வேலை வாய்ப்பின்றி தவிப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

Night
Day