சூன்யத்தால் இளம்பெண்ணின் மண்டை ஓட்டில் 77 ஊசிகள்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசாவில் சூன்யத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மண்டை ஓட்டில் இருந்த 77 ஊசிகளை மருத்துவர்கள் அகற்றினர். ஒடிசா மாநிலத்திலுள்ள போலங்கிர்ரில் ரேஷ்மா பெஹெரா என்ற இளம்பெண் கடுமையான தலைவலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது தலையில் பல ஊசிகள் இருப்பதை CT ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் அவரது மண்டை ஓட்டில் இருந்த 77 ஊசிகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் ரேஷ்மா பெஹரா, தான் சூன்யத்தால் பாதிக்கப்பட்டதாக அளித்த புகாரின் பேரில், போலீசார் தேஜ்ராஜ் ராணா என்ற மந்திரவாதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day