சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கொட்டும் மழையில் பாதை சீரமைப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள காரையார், சொரிமுத்து அய்யனார் கோவில், மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகள் முனைப்புடன் நடைபெறுகிறது. இதனிடையே பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து சொரிமுத்தையனார் கோவில் வரை செல்லும் மலை பாதை ஓரங்களில் உள்ள செடி, கொடிகளை சீரமைக்கும் பணியில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Night
Day