ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரின் குகல்தார் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொலை செய்தனர். 

குகல்தார் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, ராணுவம் மற்றும் மாநில போலீசார் இணைந்து குகல்தார் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில், 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

Night
Day