ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- ராணுவ வீரர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

Night
Day