ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

பராமுல்லா மாவட்டத்தில் உள்ள அங்கன்பத்ரி பகுதியில் பயங்கரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், 292 தோட்டாக்கள் மற்றும் 9 குண்டுகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

varient
Night
Day