ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் முதல் கட்டமாக நடைபெற்று வரும் 24 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க. மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் நிலையில், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலையில், முதற்கட்டமாக ஜம்மு பகுதியில் 8 தொகுதிகள் காஷ்மீரில் 16 தொகுதிகள் என 24 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. வாக்குச்சாவடிகளில் காலை முதலே திரளான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

முதல் கட்ட தேர்தலில் 219 பேர் போட்டியிடும் நிலையில், 23 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடத்தப்படும் தேர்தல் என்பதாலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவதாலும் அங்கு துணை ராணுவப் படையினர், ஜம்மு - காஷ்மீர் ஆயுதப்படை போலீஸ் மற்றும் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Night
Day