ஜம்மு காஷ்மீர் ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டதற்காக ஜம்மு காஷ்மீர் ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்‍கப்பட்டுள்ளதாக
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எவரும் இரக்கமற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்' என்று எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்‍கம் நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாட்டுக்‍கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாகவும், பிரதமர் மோடியின் கொள்கையின்படி, இந்த ஜமாம் இ இஸ்லாமி இயக்‍கத்தின் 
மீதான தடையை மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது என்று
அமித்ஷா சுட்டிக்‍காட்டியுள்ளார்.  ஜம்மு காஷ்மீர் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு மீது முதலில் 2019 பிப்ரவரி 28ம் தேதி தடை விதிக்கப்பட்டது.

Night
Day