ஜம்மு-காஷ்மீர் விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா், ஜம்மு, ரியாசி ஆகிய மாவட்டங்களில் நேற்று நிகழ்ந்த  சாலை விபத்துகளில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 7 போ் உயிரிழந்தனா். 

உதம்பூரில் ஜம்மு - ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் சலோா் என்ற பகுதியில் லாரியும் காரும் மோதிய விபத்தில்  காரில் இருந்த நிதின் டோக்ரா, அவரது மனைவி ரித்து, மகள்கள் குஷி மற்றும் வாணி ஆகியோா் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். ரியாசி மாவட்டத்தின் மஹோா் பகுதியில் பனி மூட்டம் காரணமாக கார் ஒன்று சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். இதேபோல் ஜம்முவின் ஜஜ்ஜாா் கோட்லி பகுதியில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற  லாரி, பாலத்தில் இருந்து கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 

Night
Day