ஜார்கண்ட்: கூட்டு பாலியல் வன்கொடுமை - ஸ்பெயின் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரேசில் நாட்டு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பெண்ணின் கணவரிடம் ஜார்கண்ட் அரசு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. தும்கா அருகே டெண்ட் அமைத்து தங்கியிருந்த பிரேசில் தம்பதியை சுற்றி வளைத்த ஏழு பேர் கும்பல், கணவரை கட்டிப்போட்டு அவரது கண் எதிரிலேயே மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. இச்சம்பவத்தில் குற்றவாளிகள் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ஜார்கண்ட் மாநில அதிகாரிகள் 10 லட்ச ரூபாய் இழப்பீடுக்கான அரசாணையை வழங்கினர். 

Night
Day