ஜார்கண்ட்: மேடையில் அழுத முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மனைவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சரின் மனைவி கல்பனா சோரன், மேடையில் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த முதலமைச்சர் சிபுசோரனின் மகன், ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவி வகித்தார். முறைகேடு குற்றச்சாட்டுகளால் தற்போது அவர் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில், ராஞ்சியில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா, தனது கணவர் குறித்து பேசத் தொடங்கினார். அப்போது, திடீரென மனம் உடைந்த அவர், கண்ணீர்விட்டு அழுதார். 

Night
Day