ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் ஜாமீனுக்கு எதிராக ED மேல்முறையீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் அளித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்க துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கும் முன் அனைத்து அம்சங்களையும் உயர்நீதிமன்றம் ஆராயவில்லை என அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. எனவே ஹேமந்த் சோரனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, நிலமோசடி புகாரில் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறையினர் கடந்த ஜனவரி 31-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். ஆனால் 5 மாதங்களுக்குப் பின் ஹேமந்த் சோரன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என கூறி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கடந்த 28-ம் தேதி ஜாமீன் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day